தமிழ்நாட்டு சிக்கல்களை எடுத்துரைக்கும் பிக்பாஸ் வீடு… தமிழர்களுக்கு வேலை முதல் தண்ணீர் இல்லா நீச்சல் குளம்!

 

தமிழ்நாட்டு சிக்கல்களை எடுத்துரைக்கும் பிக்பாஸ் வீடு… தமிழர்களுக்கு வேலை முதல் தண்ணீர் இல்லா நீச்சல் குளம்!

தொடர்ந்து 100 நாட்கள் நடைபெற உள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் நடிகை சாந்தினி, சாக்ஷி அகர்வால், பவர் ஸ்டார், சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

தொடர்ந்து 100 நாட்கள் நடைபெற உள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் நடிகை சாந்தினி, சாக்ஷி அகர்வால், பவர் ஸ்டார், சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

பிக்பாஸ் மூன்றாவது சீசனில், 15 பங்கேற்பாளர்கள்  பங்கேற்றனர்.  தொடர்ந்து 100 நாட்கள் நடைபெற உள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் அறிமுகநிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டினுள் முதன்முதலாக புகுந்த கமல்ஹாசன் அங்குள்ள வசதிகளை பார்வையிட்டார். முதலில் நுழைந்தவுடன் சூழல் ரோபோ ஒன்று இருந்தது. அதற்கு கமல் சக்கர வர்த்தி என்று பெயரிட்டார். அதன் பின் தண்ணீர் இல்லா நீச்சல் குளம் இருந்தது. ஏனெனில்  வெளியில் தண்ணீர் பிரச்னை இருப்பதை பிக் பாஸ் பிரபலங்களும் அறிந்துகொள்ள வேண்டுமாம். அதற்கு தான் தண்ணீர் இல்லாத நீச்சல் குளம் அமைக்கப்பட்டதாக கமல் விளக்கமளித்தார். வலது புறம் வழக்கம்போல் சிறை, இடதுபுறம் பேருந்து நிலையம் போன்ற வடிவதில் இளைபாறும் இடம். கைகழுவும் இடம், பாத்ரூம், குடிநீர் குழாய் என அனைத்துமே தத்ரூபமான தோற்றத்தில் இயற்கையாகவும், கிராமத்தில் பயன்படுத்துவது போன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதன்பின் உள்ளே நுழைந்தவுடன் பேருந்து போன்ற வடிவத்தில் ஒரு சமையலறை, ஆங்காங்கே கலைநயத்துடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் பொம்மைகள் என வித்தியாசமான வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளே வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த ஹவுஸ் கீப்பிங்கிடம் கமல் பேசும் உரையாடல்களும் அறிமுக நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தது. நீங்கள் வட மாநில தொழிலாளரா என கமல் கேட்பதும், அவர் இல்லை நான் தமிழ்நாடு என சொல்வது… நாட்டின் நடைமுறை சிக்கல்களை எடுத்துறைக்கும் வகையில் இருக்கிறது.  அடுத்ததாக முதல் பங்கேற்பாளராக பாத்திமா பாபுவை கமல்ஹாசன் அறிமுகம் செய்துவைத்தார்.