தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக கண்காணிக்கபட்ட நபர்களின் எண்ணிக்கை – சுகாதாரத்துறை வெளியீடு

 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக கண்காணிக்கபட்ட நபர்களின் எண்ணிக்கை – சுகாதாரத்துறை வெளியீடு

கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை கண்காணிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை கண்காணிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் குணமாகி வீட்டுக்குச் சென்றுள்ளார். அயர்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை கண்காணிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி கடந்த பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதியில் இருந்து 3481 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.