தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு உறுப்பினர்கள் நியமனம்!

 

தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு உறுப்பினர்கள் நியமனம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவிற்கு உறுப்பினர்களை நியமித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவிற்கு உறுப்பினர்களை நியமித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த குழுவில் மொத்தமாக 11 பேர் இடம்பெற்றுள்ளனர். 

ttn

அந்த அறிக்கையில் , ” அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அறிவுரையின் பெயரில் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதில் கீழ்க் கண்டவர்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். 1. திரு ஜே எம்.ஆருண், 2. டாக்டர் நாசே ஜெ. ராமச்சந்திரன், 3. திரு ஆ.கோபண்ணா, 4. திரு டி.என்.முருகானந்தம், 5.திரு.பொன் கிருஷ்ணமூர்த்தி, 6. திரு. டி.செல்வம், 7.திரு எஸ்.எஸ் ராமசுப்பு 8. திரு.கே.தணிகாசலம் 9.வழக்கறிஞர் திரு ஏ.பி சூரிய பிரகாசம், 10. வழக்கறிஞர் திரு எஸ்.கே நவாஸ், 11. திரு எம்.பி ரஞ்சன் குமார்

இக்குழுவின் முதல் கூட்டம் எனது தலைமையில் வருகின்ற மார்ச் மாதம் 6 தேதி காலை 11 மணிக்குச் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.என்று கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.