தமிழில் புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
இருப்பினும் மக்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் என இணையத்தின் வாயிலாக தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் ஊரடங்கை மீறி வெளியில் செல்லாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் மக்கள் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் வழிபாட்டு தலங்கள் கூட மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தாண்டு தமிழ் புத்தாண்டு களையிழந்துள்ளது. இருப்பினும் மக்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் என இணையத்தின் வாயிலாக தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், “அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்”என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்.
Puthandu wishes to all. Praying for a year full of joy and wonderful health.
— Narendra Modi (@narendramodi) April 14, 2020
மோடியின் இந்த வாழ்த்தை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்தினை கூறி வருகிறார்கள்.