தமிழில் குடமுழுக்கு! – தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

 

தமிழில் குடமுழுக்கு! – தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

தஞ்சையில் ராஜராஜன் கட்டிய பெரிய கோவில் குடமுழுக்கு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்வீட்டில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சையில் ராஜராஜன் கட்டிய பெரிய கோவில் குடமுழுக்கு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்வீட்டில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே. ஆகம விதிகள் இந்தக் கோரிக்கைக்கு எதிராக இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்!
சிவபெருமான் தமிழ்நாட்டில் தான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியதாகவும், அனைத்து  நிகழ்வுகளிலும் தமிழிலேயே உரையாடியதாகவும் சிவனடியார்கள் கூறுகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மதித்து தமிழில் குடமுழுக்கு செய்வது தானே சரியான செயலாக இருக்க முடியும்?” என்று  கேட்டுள்ளார்.