தமிழினத்தை அறியாதவர் என ரஜினி நிரூபித்துவிட்டார்: கவுதமன் பாய்ச்சல்

 

தமிழினத்தை அறியாதவர் என ரஜினி நிரூபித்துவிட்டார்: கவுதமன் பாய்ச்சல்

தமிழினத்தை அறியாதவர் என ரஜினிகாந்த் நிரூபித்துவிட்டார் என இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.

சென்னை: தமிழினத்தை அறியாதவர் என ரஜினிகாந்த் நிரூபித்துவிட்டார் என இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, ரஜினிகாந்த் அதற்கு, எந்த 7 பேர் எனக்கு எதுவும் தெரியாது என கூறினார். 

அரசியலுக்கு வர இருக்கிறேன் என்று அறிவித்திருக்கும் ஒருவர், தமிழகத்தில் அனைவரும் அறிந்திருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாது என கூறியது அதிர்ச்சி மட்டுமில்லை வேதனையும் அளிக்கக்கூடியது என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் கவுதமன் இதுகுறித்து கூறுகையில், தமிழினத்தை அறியாதவர் ரஜினி என அவர் நிரூபித்துவிட்டார். அவர் ஆட்சிக்கு வர துடிக்கிறார். என்ன நினைவில் கருத்து கூறுகிறோம் என்று தெரியாமல் அவர் பேசி வருகிறார் என்றார்.