தமிழர்களுக்கு அரசுப் பணிகளில்  முன்னுரிமை; தமிழகத்திற்கு எனத் தனி செயற்கைக்கோள் : டிடிவி தினகரன் அதிரடி!

 

தமிழர்களுக்கு அரசுப் பணிகளில்  முன்னுரிமை; தமிழகத்திற்கு எனத் தனி செயற்கைக்கோள் : டிடிவி  தினகரன் அதிரடி!

அம்மா மக்கள்  முன்னேற்ற கழகத்தின்  தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் வெளியிட்டார். 

சென்னை: அம்மா மக்கள்  முன்னேற்ற கழகத்தின்  தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் வெளியிட்டார். 

மக்களவைத் தேர்தல் :

ec

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக திமுக அதிமுக போன்ற பல கட்சிகள்  வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. முன்னதாக அமமுக சார்பில் 24 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் வெளியிட்ட நிலையில், இன்று  2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.  இந்தப் பட்டியலில் 14 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களும், 9 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அமமுகவின் தேர்தல் அறிக்கையைத் தினகரன் இன்று வெளியிட்டார். அதில் முக்கியமான பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

 சிறப்பம்சங்கள்:

ttv

  •  பொறியியல் பட்டதாரிகளுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்
  • தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் ஆறு இடங்களில் அமைக்கப்படும் 
  • தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு   மத்திய, மாநில அரசுப் பணிகளில்  முன்னுரிமை
  •  ரூ.2 லட்சம் வட்டியில்லாக் கடனாகத்  தனியார் நிறுவன ஊழியர்களின் திருமணச் செலவுகளுக்கு அளிக்கப்படும். 
  • விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டங்களுக்கு அனுமதியில்லை.
  •  ஜிஎஸ்டி கவுன்சில் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்படும்.
  •  அனைத்து விவசாய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி.
  •  விவசாயத்திற்காக  இலவச ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும்.
  •  ஊராட்சி ஒன்றியங்களில் அம்மா கிராமப்புற வங்கி ஏற்படுத்தப்படும்.
  •  காவலர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும்.
  •  மாற்றுத்திறனாளிகளுக்குக்  காப்பீட்டுத் திட்டம்
  • மாவட்டத்திற்கென ஒரு  தொழிற்பேட்டை உருவாக்கப்படும். 
  • கூடங்குளம் அணு உலை விரிவாக்கம் கைவிடப்படும்.  போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறப்படும்.
  • மதுபான உற்பத்தி ஆலைகளுக்குத் தமிழகத்தில் தடை.
  •  சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். 
  • வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கத் தனி வாரியம் அமைக்கப்படும். 
  • ஏழை இஸ்லாமியர்களுக்கு வீட்டு வசதி மற்றும் வக்ஃபு வாரியம் மூலம் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
  •  தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இலவச வீட்டு வசதி
  • இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு இலவச விதைகள் வழங்கப்படும்.
  •  தஞ்சாவூரில் தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டு நிறுவனம் அமைக்கப்படும்.
  • தமிழகத்திற்கு எனத் தனி செயற்கைக்கோள் ஏவப்படும்.
  • கல்லூரி வளாகங்கள் அனைத்திற்கும் இலவச வைஃபை, கல்லூரி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி
  •  மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்படும். 
  • மாணவிகளுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை
  •  ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் இலவசம்  
அமமுகவினர் மகிழ்ச்சி   

ttv

டிடிவி  தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயம், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தேவையான சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளதாக அமமுகவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.