தமிழத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8000ஐ தாண்டியது!

 

தமிழத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8000ஐ தாண்டியது!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 42லட்சத்து  15 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 42லட்சத்து  15 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இரண்டு லட்சத்து 84 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை 7,204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 

கொரோனா வைரஸ்
இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இன்று மேலும் 798பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 92-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதுவரை 2,051-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இதுவரை 2,43,952 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 11,584 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 
53-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 538 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.