தமிழக முதல்வர் வீட்டில் வெடிகுண்டு.. மிரட்டல் ஆசாமி கைது !

 

தமிழக முதல்வர் வீட்டில் வெடிகுண்டு.. மிரட்டல் ஆசாமி கைது !

குண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் போன் கால் மடிப்பாக்கத்திலிருந்து வந்தது தெரியவந்தது.   

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் குண்டு இருப்பதாக கூறிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு போன் கால் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் குண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் போன் கால் மடிப்பாக்கத்திலிருந்து வந்தது தெரியவந்தது.   

tm

இதையடுத்து மடிப்பாக்கம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில் மடிப்பாக்கம் ராம் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா என்பவரை கைது செய்தனர். 

விசாரணையில் சிக்கந்தர் பாஷா ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் முதல்வர் வீட்டிற்கு மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து கைதாகி இருந்தார் என்பது தெரியவந்தது. இவர் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருவது கவனிக்கத்தக்கது.