தமிழக முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்; அதிர வைக்கும் காரணம்!

 

தமிழக முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்; அதிர வைக்கும் காரணம்!

வினோத் குமாருடன் கோபித்துக்கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது

தமிழக முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்; அதிர வைக்கும் காரணம்!

சேலையூர்:  தமிழக முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்துள்ளனர். 

edappadi

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், பராசக்தி நகரை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். வினோத் குமாருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வினோத் குமாருடன் கோபித்துக்கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. மனைவி பிரிந்து சென்றதால் வினோத்குமார் விரக்தியிலிருந்து வந்துள்ளார். 

இந்நிலையில்,  காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்ட பேசிய அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கொன்று விடுவேன் என்று  மிரட்டல் விடுத்து இணைப்பைத் துண்டித்துள்ளார். இதையடுத்து வினோத் குமாரின் செல்போன் எண்ணை வைத்து அவரை கைது செய்த சேலையூர் போலீசார், அவர் மீது 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  பின்னர்  வினோத் குமாரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.