தமிழக மாணவர்களின் தலையெழுத்து.. நீட் தேர்விலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை..!

 

தமிழக மாணவர்களின் தலையெழுத்து.. நீட் தேர்விலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை..!

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியே நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வுக்கு விலக்கு

தமிழகத்திற்கு மட்டும் நீட்டுக்கு விலக்கு அளிப்பது முடியாத காரியம், அதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அளித்த பேட்டியில், நீட் தேர்வை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியே நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது. அதற்கான வாய்ப்புகளும் தற்போது இல்லை எனக் கூறினார்.

அடுத்த ஆண்டாவது நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற எண்ணத்தை கைவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி கொள்வதே இன்றைய மாணவர்களுக்கான நிபந்தனை…