தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து !

 

தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து !

உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்றும் நகர்ப்புற தேர்தலின் அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்றும் நகர்ப்புற தேர்தலின் அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்திருந்தார். புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட சட்ட விதிகளை நிறைவேற்றுவதற்கு முன்னர் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்ததால், தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பில்  உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

ttn

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், புதியதாக உருவான 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அந்த 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்றும் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

ttn

இதனையடுத்து, சமீபத்தில் வெளியிடப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை உருவாக்குவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்னும் இரண்டு நாட்களில் புதிய உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகின்றன.