தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயார் | கமலின் புது தொலைக்காட்சி வியூகம்

 

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயார் | கமலின் புது தொலைக்காட்சி வியூகம்

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கு தீவிரமான வேலைகளில் இறங்கியிருக்கிறது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி. மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றதையடுத்து, பிரதமர் மோடியின் இமேஜை தூக்கி நிறுத்திய தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரோடு மக்கள் நீதி மய்யம் தற்போது இணைந்து செயல்பட்டு வருது. பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி கட்சியில் பல நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கு தீவிரமான வேலைகளில் இறங்கியிருக்கிறது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி. மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றதையடுத்து, பிரதமர் மோடியின் இமேஜை தூக்கி நிறுத்திய தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரோடு மக்கள் நீதி மய்யம் தற்போது இணைந்து செயல்பட்டு வருது. பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி கட்சியில் பல நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

mnm

மக்கள் நீதி மய்யத்தில் புதிய கட்டமைப்புகள் குறித்து விளக்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு பேசிய கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் ‘அனைத்துத் தொகுதியிலும் போட்டியிட நம்மிடம் பலம் உள்ளது என்பதை நாம் நிரூபித்து விட்டோம். அடுத்த இலக்கு 2021-ல் ஆட்சியைப் பிடிப்பது தான். சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்டப் பிரச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கவுள்ளார். மேலும் கட்சியின் சார்பாக புதிய தொலைக்காட்சி தொடங்கப்படும்’ எனவும் அறிவித்துள்ளார்.

mahindran

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைக் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதியில் இருந்து கமல் தொடங்க இருப்பதாகவும் மகேந்திரன் தெரிவித்தார். ஏற்கெனவே காவேரி நியூஸ் சேனலை மக்கள் நீதி மய்யத்திற்காக வாங்கி முயற்சி செய்து, அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.