தமிழக கோவில்கள், தேவாலயங்களில் தாக்குதல் நடத்த சதி!

 

தமிழக கோவில்கள், தேவாலயங்களில் தாக்குதல் நடத்த சதி!

தமிழகத்தின் பிரபலமான கோவில்கள், தேவாலயங்களில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் இவர்கள் இருந்ததாக கோயம்புத்தூர் காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் கணக்கை வச்சு நீங்க, நானெல்லாம் என்ன பண்ணுவோம்? நாளுக்கு நாலு போஸ்ட், பத்து லைக், 15 ஹாஹா, 5 ஆட்டின் விட்டுட்டு, தோழிகள் வர்றவரைக்கும் இன்பாக்ஸ் பக்கம் குத்தவச்சிருப்போம். எல்லாரும் நம்மள மாதிரியேவா நல்ல பசங்களா இருக்காய்ங்க?

இலங்கையில் ஏப்ரல் மாதம் குண்டுவெடித்து, 250 பேர் இறந்ததையடுத்து நடந்த தீவிர விசாரணையில், குண்டு வைத்தவர்களுக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக களத்தில் இறங்கிய தேசிய புலானய்வு மையம் NIA, கோயமுத்தூரைச் சேர்ந்த மூவரை கைது செய்தது. இந்த மூவரில் அசாருதீன் என்ற நபர் ஃபேஸ்புக் மூலம் தீவிரவாதத்திற்கு ஆள் சேர்த்து வந்தது தெரியவந்துள்ளது. இலங்கையில் தற்கொலை தாக்குதலை நடத்தி, சிதறுண்டுப்போன ஹாஷிம் என்ற தீவிரவாதியும் அசாருதீனும் ஃபேஸ்புக் நண்பர்களாம். ஷாசிமால் தூண்டப்பட்ட அசாருதீன், ஐ.எஸ். இயக்கத்தின் கொள்கைகளை பரப்புவதற்காக தனியாக ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை நடத்திவந்திருக்கிறார்.

Sri Lanka Blast

கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் 14 மொபைல்போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென் ட்ரைவ்கள், மூன்று லேப்டாப்கள் இவற்றுடன் தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் துண்டு பிரசுரங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பிரபலமான கோவில்கள், தேவாலயங்களில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் இவர்கள் இருந்ததாக கோயம்புத்தூர் காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  ஃபேஸ்புக் கணக்கை வச்சு நீங்க, நானெல்லாம் என்ன பண்ணுவோம்? நாளுக்கு நாலு போஸ்ட், பத்து லைக், 15 ஹாஹா, 5 ஆட்டின் விட்டுட்டு, தோழிகள் வர்றவரைக்கும் இன்பாக்ஸ் பக்கம் குத்தவச்சிருப்போம். எல்லாரும் நம்மள மாதிரியேவா நல்ல பசங்களா இருக்காய்ங்க?