தமிழக காவலர்களுக்கான புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர்…

 

தமிழக காவலர்களுக்கான புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர்…

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி கட்டிடங்கள் உள்ளிட்ட 13 துறையின் கட்டிடங்களை காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

புதிய காவலர் குடியிருப்புகளின் கட்டிடப் பணி முழுமையாக முடிந்த நிலையில் இன்று சென்னையில் 288 காவலர் குடியிருப்புகள், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 162 காவலர் குடியிருப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி கட்டிடங்கள் உள்ளிட்ட 13 துறையின் கட்டிடங்களை, ஒரே நேரத்தில் எல்லா இடங்களுக்கும் செல்ல இயலாத நிலையில் காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

Police quarters

அது மட்டுமல்லாது கடலூர், நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 11 சேமிப்பு கிடங்குகளை தமிழக நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சார்பில் திறந்து வைத்துள்ளார்.