தமிழக எம்.பி-க்களுக்கு விருந்து அளித்த குடியரசுத் தலைவர்!

 

தமிழக எம்.பி-க்களுக்கு விருந்து அளித்த குடியரசுத் தலைவர்!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தன்னுடைய மாளிகையில் வைத்து தமிழகம், தெலங்கானா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காலை விருந்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக எம்.பி-க்கள் அனைவரும் பங்கேற்றனர்.

தமிழகம், கேரளா, தெலங்கானா எம்.பி-க்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை விருந்து வழங்கினார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தன்னுடைய மாளிகையில் வைத்து தமிழகம், தெலங்கானா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காலை விருந்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக எம்.பி-க்கள் அனைவரும் பங்கேற்றனர்.

mp

வைகோ, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, அ.தி.மு.க-வின் வைத்தியலிங்கம், நவநீதகிருஷ்ணன், கேரளாவைச் சேர்ந்த சசிதரூர் உள்ளிட்ட எம்.பி-க்கள் இதில் பங்கேற்றனர்.

mp

விருந்து நிகழ்ச்சிக்குப் பிறகு அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். எதற்காக இந்த விருந்து நிகழ்ச்சி என்பது பற்றிய தகவல் இல்லை. தகவல் மற்றும் படங்களை ராம்நாத் கோவிந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

mp

கடந்த 13ம் தேதி மேற்கு வங்கம், ஒடிஷா, ஹரியானா, கோவா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் உள்ளிட்ட மாநிலங்களைச் சார்ந்த எம்.பி-க்களுக்கு விருந்து அளித்தார். தொடர்ந்து ஒவ்வொரு மாநில எம்.பி-க்களாக அழைத்து அவர் விருந்து வழங்கி வருகிறார்.