தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் வாழ்த்து! நாளை ஆசிரியர் தினம்!

 

தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் வாழ்த்து! நாளை ஆசிரியர் தினம்!

செப்டம்பர் 5ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு நாளைய தினம் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற வாக்கிற்கிணங்க ஆசிரியர்களை நாம் தாய் தந்தைக்கு அடுத்ததாகப் பார்க்கிறோம். கூட்டுக் குடும்பங்கள் சிதறுபட்டுள்ள இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாணவ மாணவியரும் அதிக நேரங்களை செலவிடுவது தத்தமது பள்ளிகளில் ஆசிரியர்களிடத்தில் தான்.

செப்டம்பர் 5ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு நாளைய தினம் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற வாக்கிற்கிணங்க ஆசிரியர்களை நாம் தாய் தந்தைக்கு அடுத்ததாகப் பார்க்கிறோம்.

teachers

கூட்டுக் குடும்பங்கள் சிதறுபட்டுள்ள இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாணவ மாணவியரும் அதிக நேரங்களை செலவிடுவது தத்தமது பள்ளிகளில் ஆசிரியர்களிடத்தில் தான். ஒரு மாணவன் நல்ல தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருப்பது அவனுக்கு வாய்க்கப்பெறும் ஆசிரியரைப் பொருத்தே அமைகிறது. 

edappadi palanisamy

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவனுக்கு நல்ல குறிக்கோள், சமுதாய உணர்வை கற்பித்து ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்றும் தமது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் கூறியுள்ளார்