தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது! – எச்.ராஜா பாராட்டு

 

தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது! – எச்.ராஜா பாராட்டு

நிருபர்களுக்கு ஆன்லைன் மூலம் எச்.ராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர், கொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது. தொற்று குறைவாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக உள்ளது என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
நிருபர்களுக்கு ஆன்லைன் மூலம் எச்.ராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர், கொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது. தொற்று குறைவாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. சென்னையில் பொது மக்களின் ஒத்துழைப்பின்மை காரணமாக அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

koyambedy-market-78

அதேபோல், மத்திய அரசும் கொரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் மத்திய அரசு பற்றி பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை திசை திருப்புகிறார்கள்.
டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஜெயலலிதா அறிவித்ததுபோல் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.