தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக-வுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

 

தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக-வுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

தமிழக அரசுக்கு எதிராக 102 இடங்களில் போராட்டம் நடத்த திமுக-வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

சென்னை: தமிழக அரசுக்கு எதிராக 102 இடங்களில் போராட்டம் நடத்த திமுக-வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக அரசைக் கண்டித்து அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும்  போராட்டம் நடத்தப்போவதாகத் திமுக அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்துக்குக் காவல்துறை அனுமதி அளிக்காததை எதிர்த்து திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்த 127 இடங்களில்  அனுமதி கோரி திமுக தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், 102 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தவும், 20 இடங்களில் மாற்று இடத்தை பரிந்துரைக்கவும், 5 இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்தும் உத்தரவிட்டுள்ளது.