தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பு! – பொன்னார் சர்ட்டிபிகேட்

 

தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பு! – பொன்னார் சர்ட்டிபிகேட்

அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியாக இருந்தாலும் பாஜக பெயரை வைத்து தான் அரசியல் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை: அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியாக இருந்தாலும் பாஜக பெயரை வைத்து தான் அரசியல் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை எதிர்த்து தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக தலைமை நியமனம் செய்துள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் மத்திய இணை-அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, “அதிமுக உட்பட எந்த கட்சியாக இருந்தாலும் பாஜக பெயரைக் கூறாமல் அரசியல் நடத்த முடியாது.

தமிழக அரசின் செயல்பாட்டில் முன்னேற்றம் உள்ளது, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது தான் வளர்ச்சியின் உச்சத்தை தமிழகம் எட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் முன்பு இருந்ததை விட விழிப்புணர்வு அதிகம் இருபதுபோல் தெரிகிறது” என்று பதிலளித்துள்ளார்.