தமிழகம் மற்றும் புதுவையில் 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

 

தமிழகம் மற்றும் புதுவையில் 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பால் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி கிடைத்துள்ளது. சமீப நாட்களாக தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Rain

வெப்ப சலனம் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், கன்னியாகுமரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் உள்மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.