தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுவையில் கார்த்திகை முழுவதும் மாதம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு இருந்ததை பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று கூடுதலாக பொனிப்பழிவு இருக்கும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. 

ஒரு வழியாக கார்த்திகை மாதம் முடிந்து, தை பிறந்துவிட்ட நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி உள்ளிட்ட மலை மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு நேரத்தில் உறை பனி தொடரும் என்றும் உள் தமிழக மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மூடு பனி நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.