தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

 

தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றின் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும் வெப்பச் சலனத்தாலும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஓசூரில் 80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவையில் 60 மிமீ, வால்பாறையில் 50 மிமீ, கூடலூர் பஜார், பீளமேடு விமான நிலையம், சூலகிரி, கரூர் பரமத்தி, ஈரோடு ஆகிய இடங்களில் தலா 30 மிமீ மழையும் பதிவாகியுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.