தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

 

தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: தென் தமிழக பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய  மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.

தென் தமிழக பகுதிகளில் கடல் அலைகள் உயர்ந்து காணப்படும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் வானிலை ஆய்வும் மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை சாத்தூர் அணைக்கட்டு பகுதிகளில் தலா 7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, பரூர், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், வேலூர் வாணியம்பாடி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் போளூர், வேலூர் நகர் பகுதிகளில் தலா 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.