தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

 

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நவம்பர் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். அன்று முதல் 8-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை வலுப்பெறும்.

எனவே, நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்.  நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 6-ம் தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.