தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

 

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

வெயிலிலிருந்து சற்று நிம்மதி அடைந்தனர்.  ஆனால் தற்போது மீண்டும் மக்களை வெயில் வாட்டி வதைக்கிறது. 

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இதனால் மக்கள் வெயிலிலிருந்து சற்று நிம்மதி அடைந்தனர்.  ஆனால் தற்போது மீண்டும் மக்களை வெயில் வாட்டி வதைக்கிறது. 

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tt

 கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

tt

மேலும் தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதியாக மாறி தமிழகத்தை நோக்கி நகரும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.