தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேகமூட்டம் உருவாவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பம் 30 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 23டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.