தமிழகத்தில் யார் அலை வீசுகிறது? ஜெயக்குமார் விளக்கம்
Jan 27, 2019, 10:29 IST1548565184000
தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அலைதான் வீசுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
மதுரை: தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அலைதான் வீசுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் ஜெயக்குமார் மதுரை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அலைதான் வீசுகிறது. மக்களின் நலன்கருதி அதிமுக தலைமையை ஏற்று வரும் கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்வோம். முதல்வர் பழனிச்சாமி தமிழகத்திற்கான திட்டங்களை பிரதமர் மோடியிடம் போராடி பெற்று வருகிறார் என்றார்.