தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 834ஆனது

 

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 834ஆனது

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15லட்சத்து 33ஆயிரத்தை கடந்துள்ளது. 90ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15லட்சத்து 33ஆயிரத்தை கடந்துள்ளது. 90ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று 738பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது.குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 700க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ்

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், “இன்று மேலும் 86 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 89 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 763 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள். இதுவரை தமிழகத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 27 பேர் குணமடைந்துள்ளனர்.இதுவரை 7267 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை டெல்லி மாநாட்டுக்கு சென்றுவந்த 1480 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது” எனக்கூறினார்.