தமிழகத்தில் மேலும் 771பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 4,829  ஆக உயர்வு

 

தமிழகத்தில் மேலும் 771பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 4,829  ஆக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 37லட்சமாக அதிகரித்துள்ளது. இரண்டு லட்சத்து  59ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 37லட்சமாக அதிகரித்துள்ளது. இரண்டு லட்சத்து  59ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை 4058பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கொரோனா வைரஸ்

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  771 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டும் இன்று  324 போ் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 4829 லிருந்து ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1516 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 88ஆயிரத்து 241 பேருக்கு கொரோனா தொற்றுகான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.