தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1755ஆக உயர்வு!

 

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1755ஆக உயர்வு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27லட்சத்தை கடந்துள்ளது. ஒரு லட்சத்து 91ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று 1685 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் 

corona

இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1755 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 72 ஆயிரத்து 403 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 114 பேர் குணமடைந்தனர்.” என தெரிவித்துள்ளது.