தமிழகத்தில் மேலும் 669 பேருக்கு கொரோனா உறுதி! மொத்த பாதிப்பு 7,204 ஆக உயர்வு!!

 

தமிழகத்தில் மேலும் 669 பேருக்கு கொரோனா உறுதி! மொத்த பாதிப்பு 7,204 ஆக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 41லட்சத்து 26 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இரண்டு லட்சத்து 85 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை 6009 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 

கொரோனா வைரஸ்

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இன்று மேலும் 699பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 412பேர் ஆண்கள், 257 பேர் பெண்கள். தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இன்று மட்டும் 13,367 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் 52 ஆய்வகங்கள் உள்ளன. 2 லட்சத்து 43ஆயிரத்து 406 பேரிடம் இது வரை சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 பேராக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 2135-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 1,959பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.