தமிழகத்தில் மேலும் 639பேருக்கு கொரோனா தொற்று! மொத்த பாதிப்பு 11,224 ஆனது!!

 

தமிழகத்தில் மேலும் 639பேருக்கு கொரோனா தொற்று! மொத்த பாதிப்பு 11,224 ஆனது!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 47லட்சத்து 45ஆயிரமாக அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 47லட்சத்து 45ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 13ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை 10,585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 

கொரோனா பாதிப்பு

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 81பேர்கள் உட்பட 639  பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,224ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 398 பேர் ஆண்கள், 241 பேர் பெண்களாவர். தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 634-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,172ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இன்று மட்டும் 13,81பேருக்கு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் 61ஆய்வகங்கள் உள்ளன. 3,26,720பேரிடம் இது வரை சோதனை செய்யப்பட்டுள்ளது ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.