தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா: நாளுக்கு நாள் உயரும் எண்ணிக்கை!
உலகம் முழுவதும் 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24,065 பேர் பலியாகி உள்ளனர் .
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. உலகம் முழுவதும் 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24,065 பேர் பலியாகி உள்ளனர் .
இந்தியாவைப் பொறுத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694 ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் 44 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, ஈரோடு, சென்னையைச் சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29லிருந்து 35ஆக உயர்ந்துள்ளது.