தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா: நாளுக்கு நாள் உயரும் எண்ணிக்கை!

 

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா: நாளுக்கு நாள் உயரும் எண்ணிக்கை!

 உலகம் முழுவதும் 5 லட்சத்து 29 ஆயிரத்து 614  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 24,065  பேர் பலியாகி  உள்ளனர் .  

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  உலகம் முழுவதும் 5 லட்சத்து 29 ஆயிரத்து 614  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 24,065  பேர் பலியாகி  உள்ளனர் .  

ttn

இந்தியாவைப் பொறுத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆகவும்,  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694 ஆகவும் அதிகரித்துள்ளது.  இதில் 44 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக  இருந்தது. 

tt

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, ஈரோடு, சென்னையைச் சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29லிருந்து 35ஆக உயர்ந்துள்ளது.