தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்வு!

 

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்வு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ளது. ஒரு லட்சத்து 85 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று 1629 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 1300க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

corona

இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1683 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 754 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் இன்று மட்டும் 90 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளது.