தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 9000ஐ தாண்டியது!!

 

தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 9000ஐ தாண்டியது!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 43லட்சத்து 37ஆயிரமாக அதிகரித்துள்ளது. இரண்டு லட்சத்து 94 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 43லட்சத்து 37ஆயிரமாக அதிகரித்துள்ளது. இரண்டு லட்சத்து 94 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை 8,718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 

coronavirus

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இன்று மேலும் 509பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,227ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 42-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,176 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இன்று மட்டும் 12,666 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் 56ஆய்வகங்கள் உள்ளன. 2,68,250 பேரிடம் இது வரை சோதனை செய்யப்பட்டுள்ளது ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.