தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1500 ஐ தாண்டியது…

 

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1500 ஐ தாண்டியது…

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24லட்சத்து 24ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு லட்சம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24லட்சத்து 24ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு லட்சம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று 1477பேர் பாதிக்கப்பட்டுள்ளர். குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 1000க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

coronavirus

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1520 ஆக அதிகரித்துள்ளது. இன்று இருவர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். மேலும் 457 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 285 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். அனைத்து மாநிலங்களை ஒப்பிடும் போது அதிக அளவில் குணமடைந்த நோயாளிகள் தமிழகத்தில் உள்ளனர்.. இதுவரை கொரோனா தொற்றால் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. ரேபிட் கிட் சோதனை மூலம் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்படவில்லை. இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல; எதிர்க்கட்சித்தலைவர் இதனை புரிந்துக்கொள்ள வேண்டும். மலிவான அரசியலை ஸ்டாலின் கைவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.