தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு! மொத்த எண்ணிக்கை 3000ஐ தாண்டியது!

 

தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு! மொத்த எண்ணிக்கை 3000ஐ தாண்டியது!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35லட்சத்தை கடந்துள்ளது. இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 2,757பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

coronavirus

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மேலும் 266பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  3023ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இதுவரை 1,40,716 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 
30 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 38பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தம் 1,379 பேர் குணமடைந்துள்ளனர் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.