தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 234ஆக உயர்வு!!

 

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 234ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

coronavirus

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234  ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,103 பேர் தாமாக முன்வந்து மருத்துவமனையில் தகவல் தெரிவித்து சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா தெரிவித்துள்ளார்.