தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வடகிழக்கு பருவ காற்று லேசாக தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். சென்னையில் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும்ம், குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரங்களில் அதிகபட்சமாக வால்பாறையில் 4 செ.மீ மழையும், சங்கரன்கோயில் , நாங்குநேரி பகுதியில் தலா 1 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது என தெரிவித்துள்ளது.