தமிழகத்தில் பரவலாக மழை; பள்ளிகளுக்கு விடுமுறை

 

தமிழகத்தில் பரவலாக மழை; பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழக்கத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வடகிழக்கு பருமலை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 7-ம் தேதி 25 செ.மீ.க்கும் மேல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம் முழுவதும் மீதமான மழையும், ஓரிரு முறை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.