‘தமிழகத்தில் படர்தாமரை மலர்ந்தாலும் மலரும்; தாமரை மலராது’ – சீமான் கிண்டல்
Dec 25, 2018, 16:18 IST1545734928000
தமிழகத்தில் படர்தாமரை மலர்ந்தாலும் மலருமே தவிர தாமரை மலர வாய்ப்பில்லை என பாஜகவை சீமான் கிண்டல் செய்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் படர்தாமரை மலர்ந்தாலும் மலருமே தவிர தாமரை மலர வாய்ப்பில்லை என பாஜகவை சீமான் கிண்டல் செய்துள்ளார்.
வேலுநாச்சியாரின் 222-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் படர்தாமரை மலர்ந்தாலும் மலருமே தவிர, ஒரு போதும் தாமரை மலர வாய்ப்பில்லை என பாஜகவை கிண்டல் செய்தார்.
மேலும், மோடியின் தமிழக வருகையால் அரசியல் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு, நோட்டாவிற்கு கீழ் பேட்டாவும் அதற்கும் கீழ் தான் பாஜக.வும் இருக்கிறது என புதிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.