தமிழகத்தில் தாராளமாக டாஸ்மாக்கை திறக்கலாம்! பச்சைக்கொடி காட்டிய உயர்நீதிமன்றம்

 

தமிழகத்தில் தாராளமாக டாஸ்மாக்கை திறக்கலாம்! பச்சைக்கொடி காட்டிய உயர்நீதிமன்றம்

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு அதிகளவு வருவாய் ஈட்டி தரும்  மதுக்கடைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறின. இதை தொடர்ந்து தமிழகத்தில் நாளை (மே 7)   முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ள காரணத்தினால், நாளை முதல் மதுபானம் விலை உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. இதற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை திறக்க தடை விதிக்க மறுப்பு  தெரிவித்தனர்.சமூக விலகல், பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.