தமிழகத்தில் தாமரையா? அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டல்

 

தமிழகத்தில் தாமரையா? அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டல்

தமிழகத்தில் தாமரை மலர ஒருபோதும் வாய்ப்பில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் தாமரை மலர ஒருபோதும் வாய்ப்பில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை கலந்துகொள்ளும் கூட்டங்களில் எதை பேசுகிறாரோ இல்லையோ, மறக்காமல் கூட்டம் முடியும் போது தன் கைகளை உயர்த்தி, “தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.. தாமரை மலர்ந்தே தீரும்!” என்ற வசனத்தை மட்டும் உச்சரிக்க தவறியதே இல்லை. 

இவர் ஒரு புறம் இப்படி பேசிக் கொண்டிருக்க, தமிழக அரசியல் நிலைமையோ அதற்கு நேர் எதிராக இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தமிழகத்தில் தாமரை ஒருபோதும் வாய்ப்பே இல்லை. அப்படி தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் பாஜக டெபாசிட் வாங்கி விட்டாலோ அல்லது நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற்றாலோ நல்லது” என கிண்டல் செய்துள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சி குறித்து தமிழிசை சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.