தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு! தி.நகரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா….

 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு! தி.நகரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா….

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  உலகம் முழுவதும் 6 லட்சத்து 17 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 28, 376 பேர் பலியாகி  உள்ளனர்.  இந்தியாவைப் பொறுத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 46ஆகவும்,  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 933 ஆகவும் அதிகரித்துள்ளது.  இதில் 84 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆக இருந்தது. 

 

 

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 லிருந்து 42 ஆக உயர்ந்துள்ளது.