தமிழகத்தில் கொரோனா வைரஸ்? தமிழக முதல்வர் விளக்கம்!
Mar 5, 2020, 07:25 IST1583373301000
கடந்த ஆண்டை விட கூடுதலான மருத்துவமனைகள் தமிழகத்தில் இந்தாண்டும் அமையவுள்ளது’ என்றார்.
கிருஷ்ணகிரியை அடுத்த போலுப்பள்ளி பகுதியில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமையவுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய அவர், தனியார் மருத்துவமனையில் உள்ள வசதியை விட கூடுதல் வசதிகள் கிடைக்கக்கூடிய மருத்துவமனையாகப் புதிதாக அமையவுள்ள மருத்துவமனைகள் அமையும். கடந்த ஆண்டை விட கூடுதலான மருத்துவமனைகள் தமிழகத்தில் இந்தாண்டும் அமையவுள்ளது’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனாவை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது’ என்றார்.