தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 21 வயது இளைஞர் குணமாகி வீடு திரும்பினார்!
தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35லிருந்து 38ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35லிருந்து 38ஆக உயர்ந்துள்ளது.
Update: The 21 Y M who traveled from Dublin, Ireland has completely recovered from #COVID2019 & discharged from #RGGH after 2 subsequent mandatory tests proved -ve. He will continue to b home quarantined for d next 14 days. Appreciate d team who took care of this young man. #CVB
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 27, 2020
இந்நிலையில் கடந்த மாதம் அயர்லாந்து நாட்டில் உள்ள டப்ளின் நகரில் இருந்து சென்னைக்கு வந்த 21 வயது இளைஞர் கொரோனா பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது அவருக்கு குணமாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் டிஸ்சார்ஜ்க்கு பிறகு 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ள அவர் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளாbasakr