தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு பலி.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்வு!

 

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு பலி.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று கொரோனாவால் 913 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 969 ஆக உயர்ந்துள்ளது.  

ttn

நேற்று முன் தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நபர் கொரோனாவால் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக இருந்தது. இந்நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவர் கடந்த சில நாட்களாக ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.