தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. உலகம் முழுவதும் 6 லட்சத்து 17 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 28, 376 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 46ஆகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 933 ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் 84 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது
#update: 2 Pts US return admitted at #RGGH for #Covid_19 +ve, from Porur is discharged from hospital today.They have recovered from d illness & tested negative twice.They will be home quarantined for next 14 days. I appreciate the Dean & team who took care of d Pts. @MoHFW_INDIA
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 29, 2020
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில், “
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர். கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த இருவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர். அமெரிக்காவிலிருந்து திரும்பிய இருவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது குணமடைந்துள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.