தமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!!

 

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!!

இந்தியாவில்  கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது. அதேபோல் தமிழகத்தில் 671பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய நிலவரப்படி 6பேர் பலியாகியிருந்தனர்.

இந்தியாவில்  கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது. அதேபோல் தமிழகத்தில் 671பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய நிலவரப்படி 6பேர் பலியாகியிருந்தனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

coronavirus

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 64 வயது பெண் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியான எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.